வாய் விட்டு சிரித்தால்...

நண்பர்களே, சிரிப்பு மனிதராசியின் ஆறாம் அறிவின் ஆதாரம்..முடிந்த அளவு சிரியுங்களேன்..... Change your Font Settings to UTF-8 to read the tamil letters here..[View->Encoding->UTF-8]

Name:
Location: Karaikudi, Tamilnadu, India

ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பதல்ல வாழ்க்கை! எப்படி வாழ்ந்தோம் என்பதும் ஒரு அங்கம். வாழக் கிடைத்த வாழ்க்கையில், ஒரு சிலருக்காவது வசந்தத்தின் முகவரியை அறிமுகம் செய்தோமேயானால் அதுவே வசீகரத்தின் வனப்பைக் கூட்டும்!

Sunday, May 21, 2006

குறுந்தகவல் # 5: 24 எறும்புகளும் ஒரு யானையும்

ஒருமுறை 24 எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

யானை ஆற்றில் குதித்தவுடன் 23 எறும்புகளும் கரைக்குத் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த மற்ற 23 எறும்புகளும் ஒரு சேரக் கத்தின.. "அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா மாப்ள...."

நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய தோழி அர்ச்சனாவிற்கு!

0 Comments:

Post a Comment

<< Home