வாய் விட்டு சிரித்தால்...

நண்பர்களே, சிரிப்பு மனிதராசியின் ஆறாம் அறிவின் ஆதாரம்..முடிந்த அளவு சிரியுங்களேன்..... Change your Font Settings to UTF-8 to read the tamil letters here..[View->Encoding->UTF-8]

Name:
Location: Karaikudi, Tamilnadu, India

ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பதல்ல வாழ்க்கை! எப்படி வாழ்ந்தோம் என்பதும் ஒரு அங்கம். வாழக் கிடைத்த வாழ்க்கையில், ஒரு சிலருக்காவது வசந்தத்தின் முகவரியை அறிமுகம் செய்தோமேயானால் அதுவே வசீகரத்தின் வனப்பைக் கூட்டும்!

Tuesday, April 24, 2007

சர்தார்ஜியும் பயணநேரமும்

சர்தார்ஜி: மும்பைக்கும் புதுதில்லிக்குமான விமானப் பயணத்தின் நேரத்தைக் கூற முடியுமா?
பணிப்பெண்: ஒரு நிமிஷம்.. (இருங்கள் பார்த்துச் சொல்கிறேன்)
சர்தார்ஜி: ஓ.. அப்படியா.. இவ்வளவு துரிதமாகவா? நன்றி
எனக்கூறித் தொலைபேசியை அதனிடத்தில் வைத்துவிட்டார் ! ;-)

Labels:

Tuesday, April 17, 2007

சிறப்புக் கேள்வி

நபர் 1: உங்ககிட்ட ஒரு சிறப்புக் கேள்வி. அதுக்கு நீங்க 'தெரியும்', 'தெரியாது' இதுல ஏதாவது ஒண்ணு தான் பதிலா சொல்லணும்.

நபர் 2: சரிங்க.. அப்படி என்னங்க கேள்வி?

நபர் 1: நீங்க லூசுங்கறது உங்க வீட்ல இருக்கறவங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?

நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய தோழன் சதீஷ்குமாருக்கு!

Labels:

பேருந்தில் அந்நியன்


அந்நியன்: ஏன்பா, இப்படி தினமும் பஸ்ல டிக்கட் எடுக்காம வர்றியே, இது தப்புன்னு உனக்குத் தெரியாதா?

உடனிருப்பவர்: முடியை விலக்கிட்டுப் பார்றா மூதேவி, நான் தான் பஸ்ஸோட டிரைவர்! ;-)

நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய நண்பன் முரளிகாந்தனுக்கு!

Labels: ,